24 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 17. தராசு முனைகள்!

“நுண்மாண் நுழைபுலம்!”
“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று” – வள்ளுவம்
நுண்மாண் நுழைபுலமும்
கவித்துவமுமுள்ள படைப்புகள் இவை!
அற்புதமான!
மிகவும் அழகான சொல்லாட்சி!!
கற்பனைக் கலப்பில்லாத
மிகவும் யதார்த்தமான பாடுபொருள்கள்!
கவிதைக் களம் பல கண்டு
வெற்றி வாகை சூடிய கைவண்ணம்!
கால வெள்ளத்தில்
தனித்து நின்றே எதிர்நீச்சல் போட்டு
கரை ஒதுங்கக்கூடிய கலைப்படைப்பு!
தகுந்த முறையில் ஆவணப்படுத்தி
எதிர்கால சந்ததியிடம்
கையளிக்கப்படவேண்டிய
கலைப் பொக்கிஷம்!
தமிழை நேசிப்பதனால்
தங்களை நேசிக்கிறேன்!
வாழ்த்துக்கள்!
வளரட்டும் தங்கள் திருப்பணி!
அன்புடன்
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
19-04-2011
Like this:
Like Loading...
Related
Previous 06 – அன்னையும் பிதாவும் நீரே! Next 02 – தர்ஷினி கவிதைகள்!