04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“சாதனை!”
எதையும்
சாதிக்கப் பிறந்தவனே!
எதனையும்
சாதிக்காமல் போய் விடாதே!
இதுவரை
நீ சாதித்தவை எல்லாம்
சாதனைகளே அல்ல..
இனிமேல் தான்
சாதிக்கப் போகின்றாய்!
சூரியனையே சுட்டெரிக்கும்
நெருப்பு உன்னுள்ளே!
வெறும் குப்பி விளக்காய்
அணைந்து விடாதே!
பெரும் புயலையே புறம்காணும்
மூச்சு உன்னுள்ளே
சிறு புல்லாங்குழல் ஊத
பயன் பட்டுவிடாதே!
இப் பூமிப்பந்தின் சரித்திரத்தையே
ஒரு நொடியில் புரட்டிவிடும்
ஆற்றல் உன்னிடம்…
பாரம் இழுக்கும் காளை மாடாய்
பலியாகி விடாதே!
நீ சாதிக்கப் பிறந்தவன்!
இதுவரை
உன் சந்ததி சொன்னது!
இனிமேல்
சரித்திரம் சொல்லட்டும்!!
13/01/2000
Like this:
Like Loading...
Related
Previous 16 – பார்த்தேன்! Next 18 – ஆயுதம்!