04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“புன்னகைப் பூக்கள் மலரட்டும்!”
இனிய இரவுகள் மலரட்டும்!
இதமாக உன்கண்கள் வளரட்டும்!
இலட்சியக் கனவுகள் தோன்றட்டும்!
எண்ணங்கள் யாவும் நிறைவேறட்டும்!!
கற்பனை வளங்கள் பெருகட்டும்!
காவிய மலர்கள் பூக்கட்டும்!!
சிந்தனைச் சிறகுகள் விரியட்டும்!
செந்தமிழ் கலைகள் வளரட்டும்!!
காதலர் நெஞ்சங்கள் கனியட்டும்!
கண்களின் வார்த்தைகள் புரியட்டும்!!
சீரிய குணங்கள் சிறக்கட்டும்!
சீதனக் கொடுமைகள் ஒழியட்டும்!!
ஆலய மணிகள் ஒலிக்கட்டும்!
ஆயிரம் தீபங்கள் ஒளிரட்டும்!!
அறநெறி வாழ்வு நிலைக்கட்டும்!
ஆண்டான் அடிமை மறையட்டும்!!
பூமியில் யுத்தம் ஒழியட்டும்!
புதிய யுகங்கள் தோன்றட்டும்!!
புன்னகைப் பூக்கள் மலரட்டும்!
பூமியில் வசந்தம் வீசட்டும்!!
Like this:
Like Loading...
Related
Previous 19 – மதங்களைக் காப்போம்! Next 21 – உன் இதயம் சுமக்கட்டும்!