16 – பார்த்தேன்!

பார்த்தேன்!”

 

வாசல் தெளிக்கும்

வளைக்கரங்கள் பார்த்தேன்!

கோலம் போடும்

சரிந்த குழல் அழகு பார்த்தேன்!

செக்கச் சிவந்த

நெற்றித்திலகங்கள் பார்த்தேன்!

சிந்தி வழியும்

அழகுப்புன்னகைகள் பார்த்தேன்!

பார்த்த இடமெங்கும்

பைந்தமிழைக் கண்டேன்!

பழகிய உறவுகளில்

பாசமலர்கள் கண்டேன்!

சென்ற இடமெங்கும்

சிரித்த முகம் கண்டேன்!

செப்புகின்ற வார்த்தைகளில்

செந்தமிழைக் கண்டேன்!

வந்தாரை வரவேற்கும்

வாயிற்கதவுகள் பார்த்தேன்!

வரவேற்கக் காத்திருக்கும்

வாசற்படிகள் பார்த்தேன்!

உதவிக்கரம் நீட்டும்

உறவுகளைப் பார்த்தேன்!

உரத்துப் பேசாத

உயர் குணங்கள் பார்த்தேன்!

சந்திகள் தோறும்

சந்நிதிகள் பார்த்தேன்!

சாலைகள் தோறும்

சனசந்தடிகள் பார்த்தேன்!

தெருக்கள் தோறும்

தெய்வீக இராகம் கேட்டேன்!

திருத்தலங்கள் தோறும்

மணியோசை கேட்டேன்!

பூக்கடைகள் எங்கும்

புன்னகை நிலவுகள் பார்த்தேன்!

பூத்திருந்த மல்லிகையில்

முத்துப் பல்லழகு பார்த்தேன்!

மொட்டவிழ்ந்த தாமரைகள்

முகத்தழகு பார்த்தேன்!

முகம்மூடும் சேலைக்குள்

மோகனங்கள் பார்த்தேன்!

கலைகள் வாழும்

கலைகூடங்கள் பார்த்தேன்!

கண்ணைக் கவரும்

கார்குழல் மேகங்கள் பார்த்தேன்!

கைகாட்டி விலகும்

காதலர்கள் பார்த்தேன்!

கண்சிமிட்டி போகும்

தாவணிகள் பார்த்தேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: