04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“நாளைய மனிதன்!”
மனிதனுக்குரிய
மதிப்பீடுகள் குறையும்!
ஆனால்…
மிகச்சக்தி வாய்ந்த
இயந்திரமும் அவன்தான்!
ஆண்டுகள் தோறும்
தன்னையும்
வடிவமைத்துக்கொள்வான்!
மனித மூளை
ஒரு சிம் (SIM) அளவில்
செறிவாக்கம் செய்யப்பட்டு
பொருத்தப்படும்!
இதுவரை..
ஆண் பெண் வேறுபாடு
இயற்கையின் நியதி!
இனிமேல்…
அவன் விருப்பப்படி!
எங்கும் நடக்கும்
கலப்புத் திருமணம்…
கன்னிக்கும் கணனிக்கும்!
சிறு பொத்தானில் அடங்கும்
சூரிய(னி) குடும்பம்!
தேவைக்கேற்ப
கணனி தீர்மானிக்கும்
கால நகர்வு… காற்று மழை…
புவிச்சுழற்சி!
உலகின் குடிப்பரம்பல்
ஏனைய கிரகங்களுக்கும்
நகர்த்தப்படும்!
அணு பரிசோதனைகளுக்கு
பூமியில் களம் அமையும்!
செவ்வாய்க் கிரகத்திலிருந்து
பூமி இயக்கப்படும்!
இயந்திர மனிதன்
பூமியை மட்டுமல்ல
பிரபஞ்சத்தையும் காவல் காப்பான்!
ஆயுதங்கள்…
ஏவுகணைகள்…டாங்கிகள்… புடைசூழ
இயந்திரமனிதன் அணிவகுத்து செல்வான்
நாளைய மனிதனோ
குண்டு துளைக்காத கூண்டிற்குள்
பதுங்கி இருப்பான்!
05/12/1999
Like this:
Like Loading...
Related
Previous 13 – அன்பு! Next 15 – வியாபாரம்!