03 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 04. இளையகன்னி!
“மழை!!”
பூமிக்கு
வானம் நடாத்தும்
பூப்புனித நீராட்டுவிழா!
பூமியின்
உச்சி குளிரும்!
உடலெங்கும் நனையும்!
நாணத்தில்
பூமி நெளியும்!
மஞ்சள் பூசும்!
கூந்தல் நீவி
முதுகு தேய்த்துவிடும்!
பூமி புன்னகைக்கும்!
பொட்டு வைத்துக்கொள்ளும்!
புத்தாடை புனைந்து
புதுப்பெண் போல
பூமி வெட்கப்படும்!
ஊடலில்
திளைத்த பூமி
இப்போது
கூடலுக்குத் தயாராகிவிடும்!
வானம் சாந்தி பெறும்!
பூமியோ
சிலிர்த்துக் கொள்ளும்!
Previous 03 – கண் விழித்தெழுவாய்! Next 05 – நிலவு!