01 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 12. வாழ்த்துக்கள் பாடுவோம்!
“சின்னக் கலைவாணிக்கு!”
சின்னக் கலைவாணிக்கு
சிறப்புநாள் வந்ததென்று
வண்ணக் கோலங்கள்
வாசலெங்கும் போடுகிறோம்!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமோடு நலன்கள் பெற்று!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமான உயர்வு கண்டு!
ஆயிரம் மலர்கள் சூட்டி!
அன்பெனும் மலர்கள் சாற்றி!
பண்பெனும் தீபம் ஏற்றி!
பல்லாண்டு காலம் வாழ்க!
சொர்க்கத்தின் திரை விளக்கி
சுகந்தி அக்கா மலர்தூவ!
சின்னமுகம் திருத்தி!
சின்னக்கா சிரிக்க வைப்பாள்!
அம்மா மகிழ்ந்திருக்க!
அப்பா வாழ்த்துரைக்க!
அம்மம்மா அருகிருந்து
ஆசைமுகம் பார்த்திருக்க!
அண்ணன்மார் அகம் மகிழ!
மாமன்மார் மனம் குளிர!
சித்தப்பா சித்தி
சிறந்த நல்வாழ்த்துரைக்க!
சுற்றம் சூழ்ந்துவர!
தோழிமார் சேர்ந்துவர!
கல்வி தந்த ஆசான்கள்
கலைவாணி உனை வாழ்த்த!
சின்னக் கலைவாணிக்கு
சிறப்புநாள் வந்ததென்று
வண்ணக் கோலங்கள்
வாசலெங்கும் போடுகிறோம்!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமோடு நலன்கள் பெற்று!
வாழ்க நீர் பல்லாண்டு!
வளமான உயர்வு கண்டு!
அம்மா அப்பா சகோதரங்கள்
மற்றும் உறவுகள்!
இருளகற்றி! ஒளியேற்றி!
எழுத்தறிவித்த ஆசான்கள்!!
15-06-1999
Previous 02 – அருந்தவச் செல்வி வாழ்க! Next 04 – மீண்டும் வாழ்த்துகிறேன்!